Monday 28 November 2011

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

நீயே ஒரு கவிதை - அம்மா

அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத ஒரு
காகிதமும் சில பொய்களும் போதும்
அம்மா உன்னை பற்றி எழுத
உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்
அம்மா
நான் சொன்ன முதல் வார்த்தை
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை....மா
அம்மா
நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!